close
Choose your channels

சமந்தாவின் விவகாரத்துக்கு பின் நாக சைதன்யா எழுதிய முதல் காதல் கடிதம்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென பிரிவதாக அறிவித்தனர் என்பதும் எனினும் நண்பர்களாக தொடர்ந்து இருப்போம் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவாகரத்துக்குப் பின்னர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் சமந்தா பிசியாகி வரும் நிலையில் தெலுங்கு திரையுலகில் நாக சைதன்யாவும் பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யா பதிவு செய்துள்ளார். கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாக சைதன்யாவுக்கு புதிய காதல் தோன்றியதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் நாக சைதன்யாவின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.