close
Choose your channels

29 வயதில் கள்ளக்காதல், செல்போனில் ஆபாச வீடியோக்கள்: இளம்பெண்ணின் பரிதாப முடிவு!

Saturday, November 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்ததாகவும் அவரது செல்போனில் ஆபாச படங்கள் அதிகம் இருந்ததாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி சரண்யா. ரமேஷ், சரண்யா இடையே 12 வயது வித்தியாசம் என்றும் ரமேஷ் சர்க்கரை நோயாளி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டெய்லரிங் கிளாஸ் சென்று கொண்டிருந்த சரண்யாவுக்கு அங்கு 29வயது பாலாஜி என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. முதலில் நட்பும் அதன் பிறகு கள்ளகாதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது. மேலும் ரமேஷ் இல்லாத நேரத்தில் பாலாஜி அடிக்கடி சரண்யாவின் வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று திடீரென சரண்யா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாரின் விசாரணையில் சரண்யா தூக்கில் தொங்கியதற்கு முந்தைய நாள் பாலாஜி சரண்யாவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்துள்ளதாகவும், இருவரும் தனிமையில் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் பாலாஜி போதையில் சரண்யாவை அடித்ததாகவும் கூறப்படுகிறது

மேலும் சரண்யாவின் செல்போனில் அந்தரங்க புகைப்படங்களும் ஆபாச வீடியோக்க்ளும் இருந்ததை குடும்பத்தினர்களே பார்த்ததாகவும் ஆனால் திடீரென அந்த ஆபாச படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனை அடுத்து பாலாஜியை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

விசாரணையில் சரண்யாவின் வங்கிக் கணக்கிலிருந்து பாலாஜிக்கும் அவரது நண்பர்களுக்கும் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் இன்னும் பல அதிரடி திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.