close
Choose your channels

ரூ.4 கோடிக்கு நடராஜன், ரூ.14 கோடிக்கு தீபக் சஹார்: ஏலம் எடுத்த அணிகள் எது தெரியுமா?

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் யார்க்கர் கிங் நடராஜன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் தலா ரூபாய் 4 கோடி மற்றும் 14 கோடிக்கு ஏலம் போய் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த தீபக் சஹாரை ஏலம் எடுக்க ஹைதராபாத், டெல்லி, சென்னை, மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டன. இறுதியில் 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. அதேபோல் நடராஜனையும் பல அணிகள் போட்டி போட்டு ஏலம் கேட்ட போதிலும் ஹைதராபாத் அணி விட்டுக்கொடுக்காமல் 4 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்து கொண்டது.

இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: தோனி, ஜடேஜா, பிராவோ, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயின் அலி, ருத்ராஜ், தீபக் சஹார் ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒருவர் கூட புதிய வீரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.