close
Choose your channels

ஒரே நாளில் விருதுகளை பெறும் ரஜினி-தனுஷ்: மத்திய அமைச்சர் தகவல்

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்தும் தேசிய விருதை தனுஷும் ஒரே நாளில் பெற இருப்பதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் அதில் சிறந்த நடிகருக்கான விருது ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தனுஷூக்கு அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. அதேபோல் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தார்.

இந்த நிலையில் 67வது தேசிய விருதுகள் வழங்கும் தேதி குறித்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் அதாவது மே 3ஆம் தேதி தேசிய விருதுகள் வழங்கப்படும் விழா நடைபெறும் என்றும் அதே நாளில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து தாதா சாகிப் பால்கே விருதை ரஜினியும் தேசிய விருதை தனுஷும் ஒரே நாளில் பெற இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிக உயர்ந்த திரைப்படங்களுக்கான விருதுகளை ரஜினியும், தனுஷும் ஒரே நாளில் பெற உள்ளதை அடுத்து ரஜினி, தனுஷின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos