close
Choose your channels

நயன்தாராவின் இரட்டை மகிழ்ச்சி

Saturday, August 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாராவுக்கு நேற்று இரட்டை மகிழ்ச்சியான நாள். அவர் நடிப்பில் நேற்று வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம் ஊடகங்களில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது மட்டுமின்றி நயன்தாராவின் நடிப்புக்கும் பாராட்டு மழை குவிந்தது, மற்றொன்று நேற்று ஓணம் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொச்சியில் கொண்டாடியது.

இந்த இரட்டை மகிழ்ச்சியினால் சந்தோஷத்தில் மூழ்கியிருந்த நயன்தாரா, நேற்று முதல் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்கும் 'சோலமாண்டே கூடாரம் என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்த படத்தை ஏ.கே.சாஜன் இயக்கி வருகிறார்.

மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள 'புரூஸ்லீ' படத்தில் நயன்தாரா, நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது நயன்தாரா, இப்போதைக்கு ஜி.வி.பிரகாஷ் படம் உள்பட வேறு புதிய படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் தற்போது 'இது நம்ம ஆளு', 'நானும் ரெளடிதான்', 'காஷ்மோரா' மற்றும் 'திருநாள்' ஆகிய படங்களில் மட்டும் நடித்து வருவதாகவும், அவர் நடித்து முடித்துள்ள மாயா' விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே ஜி.வி.பிரகாஷ் படத்தில் நயன் நடிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.