close
Choose your channels

திருமணமான மறுநாளே மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்: யாரிடம்? எதற்காக?

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேற்று முன்தினம் திருமணம் செய்தவுடன் நேற்று அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசித்த பின் கோவிலுக்கு வெளியே விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர். அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காலணி அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

காலணி அணிய தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருவரும் காலணி அணிந்திருந்ததால் இதுகுறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தங்களது செயலுக்காக தேவஸ்தான அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் திருமணம் முடிந்த மறுநாள் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்ததாகவும் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் போட்டோ ஷாட் எடுக்கும் போது அவசரம் காரணமாக நானும் நயன்தாராவும் காலனி அணிந்திருந்ததை உணர வில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கடவுளுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.