close
Choose your channels

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: மேலும் ஒரு மாணவர் மரணம்

Tuesday, June 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு மாணவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து 8வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்

டெல்லியை சேர்ந்த பிரணவ் மகேந்திரதா என்ற மாணவர் நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவை ஆர்வத்துடன் இணையதளம் மூல்ம் பார்த்தார். ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இந்த அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாத பிரணவ் திடீரென தனது அபார்ட்மெண்டின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த பிரணவ் இந்த ஆண்டு எப்படியும் தேர்ச்சி பெற்றுவிட கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டும் வெற்றி பெற முடியாத விரக்தியில் பிரணவ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.