close
Choose your channels

'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் பிரச்சனையில் திடீர் திருப்பம்!

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மார்ச் 5ஆம் தேதி அதாவது வரும் வெள்ளியன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று திடீரென ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பதாக செய்திகள் வெளிவந்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது ’நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் பிரச்சினை அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் எனவே திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை மறுநாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்யப்படுவதாக திரையரங்குகளும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நெஞ்சம் மறப்பதில்லை திட்டமிட்டபடி மார்ச் 5-ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஸ்னீக்பிக் வீடியோவில், எஸ்ஜே சூர்யாவின் நடிப்பை பார்த்து கோலிவுட் திரையுலகினர்களே மிரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.