close
Choose your channels

தற்கொலை செய்து கொண்ட ஃபேஸ்புக் காதல் ஜோடி: உருக்கமான கடிதம்

Wednesday, November 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஃபேஸ்புக்கில் பழகி காதலித்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த நந்தகுமார் என்ற 19 வயது இளைஞரும், திருப்பூரை சேர்ந்த சத்யப்ரியா என்ற 21 வயது இளம்பெண்ணும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நண்பரானார்கள். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவீட்டார்களும் காதல் ஜோடியை ஒதுக்க வைக்க இருவரும் தனியாக வீடு அமர்த்தி தங்களுடைய புது இல்வாழ்க்கையை தொடங்கினர்.

இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் அவர்களுடைய வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது நந்தகுமார் தூக்கில் தொங்கியும், சத்யப்ரியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த வீட்டில் காதல் ஜோடி இருவரும் சேர்ந்து எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், 'அன்புள்ள எங்கள் சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு பிரிகிறோம். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் சந்தோ‌ஷமாக செல்கிறோம். அதனால் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினால் போதும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான ஆறே மாதங்களில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.