close
Choose your channels

இரண்டு படங்களில் ஒரே கேரக்டரில் நடிக்கும் நிகில்கல்ராணி

Thursday, November 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷுடன் 'டார்லிங்' படத்தில் நடித்த நடிகை நிகில்கல்ராணி, தற்போது பாபிசிம்ஹாவின் 'கோ 2' படத்தில் பத்திரிகை நிருபராக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் நிகில்கல்ராணி மீண்டும் ஒரு படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

'காஞ்சனா 2' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் ராகவா லாரன்ஸ் தற்போது 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'பட்டாஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஐ.பி.எஸ் அதிகாரியாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள இந்த படத்தில் நிகில் கல்ராணி, பத்திரிகை நிருபராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும், நிகில் கல்ராணி இந்த படத்தில் இம்மாத இறுதியில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஜீவா, காஜல் அகர்வால் நடித்து வரும் 'கவலை வேண்டாம்' என்ற படத்திலும் நிகில் கல்ராணி, முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.