close
Choose your channels

மால்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து! இங்கல்ல...தெலுங்கானாவில்

Wednesday, March 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் பார்க்கிங் கட்டணம் என்ற கொள்ளையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானாவில் அதிரடியாக மால்களில் பார்க்கிங் கட்டணங்களை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானாவில் வரும் ஏப்ரல் முதல் பார்க்கிங் கட்டணங்களை வரையறைப்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் உள்ள மால்களில் முதல் அரை மணி நேரத்துக்கு எந்த வாகனத்துக்கும் கட்டணம் கிடையாது என்றும், அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை, வாகன உரிமையாளர் அந்த மாலில் ஏதேனும் பொருள் வாங்கியதற்கான பில்லை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக வாகனம் நிறுத்துபவர்கள், அந்த வாகன நிறுத்துக் கட்டணத்தை விட அதிக மதிப்பிற்கு பொருட்கள் வாங்கினாலும் கட்டணம் கிடையாது. இதில் திரையரங்க டிக்கெட் கட்டணமும் அடங்கும்.  தெலுங்கானா மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டண வரையரையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பார்க்கிங் கட்டணங்களை தமிழக அரசு வரையறுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.