close
Choose your channels

கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்த படத்தில் நயன்தாரா

Monday, October 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், 'பாகுபலி' நடிகர் ராணா டக்குபாய் தயாரிக்கும் கொரிய மொழி ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த படத்தின் குழுவினர் கேட்ட தேதிகளை கீர்த்திசுரேஷால் கொடுக்க முடியாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து நயன்தாராவை அணுகிய தயாரிப்பாளர் ராணா, அவரிடம் கொரிய மொழி திரைப்படத்தை பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அந்த படத்தை பார்த்த நயன்தாரா, படம் பிடித்துவிட்டதால் அந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்தில் நயன்தாரா போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்த 'சயிர நரசிம்மரெட்டி' சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்யுடன் நயன்தாரா நடித்த 'பிகில்' திரைப்படமும், பொங்கல் தினத்தில் ரஜினியுடன் நயன்தாரா நடித்த 'தர்பார்' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.