உறவினரால் பாலியல் பலாத்காரம்: கல்லூரி பேராசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

சகோதரி கணவரின் தம்பியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பரிபதா என்ற பகுதியில் கல்லூரிப் பேராசிரியை ஒருவர் பெண்கள் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய சகோதரி கணவரின் தம்பி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதுகுறித்து போலீசில் பேராசிரியை புகார் செய்ததாகவும் தெரிகிறது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளனர் ஆனால் அந்த நபர் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கல்லூரி பேராசிரியை தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றபோது சகோதரி கணவரின் தம்பி மட்டும் தனியாக இருந்தார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து கல்லூரி பேராசிரியையை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கல்லூரி பேராசிரியை ஹாஸ்டலுக்கு திரும்பி வந்ததும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

ஹாஸ்டலில் உள்ள பெண்கள், கல்லூரி பேராசிரியையின் அறையின் கதவு நீண்ட நேரம் பூட்டி கிடந்ததாகவும் உணவு சாப்பிடுவதற்கு அவர் வரவில்லை என்பதை அறிந்தும் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது கல்லூரி பேராசிரியை தூக்கில் தொங்கி பரிதாபமாக மரணம் அடைந்திருந்தார். இதனை அடுத்து கல்லூரி பேராசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News

'மாநாடு' படத்திற்காக சிம்பு இதுவரை செய்யாத விஷயம்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறுத்தை சிவா, அட்லி எல்லாம் என்ன பண்ணுவாங்க: சந்தானத்தின் 'டகால்டி' டீசர்

சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் 'டகால்டி'படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அட்டகாசமான தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு குடும்பம் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கு: சத்யராஜ் 

கார்த்தி, ஜோதிகா நடித்த 'தம்பி'திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது

ரஜினியுடன் இரட்டை பலத்துடன் மோதும் சசிகுமார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை படக்குழுவினர் விற்பனை செய்து வருகின்றனர்