close
Choose your channels

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: 4வது எம்.எல்.ஏ என்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி

Sunday, June 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

https://1847884116.rsc.cdn77.org/tamil/home/senji_mla.jpgதமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாமர மக்களை மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் அவ்வப்போதுப் பாதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பதும் மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே திமுகவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா உறுதி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவதாக செஞ்சி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.