close
Choose your channels

இறுதிச்சடங்கு செய்யும்போது திடீரென எழுந்து உட்கார்ந்த பெண்!

Thursday, January 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் ஒருவரின் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்தப் பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷீதா என்ற பெண் சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக கராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு இறப்பு சான்றிதழும் அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அளித்துள்ளனர்.

இதனால் ரஷீதாவின் இறப்பை உறுதி செய்த அவருடைய உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரஷீதாவின் உடம்பை குளிக்க வைக்கும் போது திடீரென அவரது உடலில் அசைவு இருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அவர் மீண்டும் மருத்துவ இறப்பு சான்றிதழ் கொடுத்த அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இறந்ததாக கருதப்பட்ட பெண் ஒருவர் இறுதிச் சடங்கின் போது திடீரென உயிரோடு எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.