close
Choose your channels

சாலையின் ஒரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம்… திடீரென எழுந்து நடந்து சென்ற சுவாரசியக் காட்சி!!!

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாலையின் ஒரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம்… திடீரென எழுந்து நடந்து சென்ற சுவாரசியக் காட்சி!!!

 

உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் சாலை அருகே துணியால் சுற்றப்பட்டு கிடந்த ஒரு சடலத்தை ஒருவர் பார்க்கிறார். இதனால் பதற்றமடைந்த அவர் போலீஸாருக்குத் தகவலைக் கொடுக்கிறார். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு அருகே பொதுமக்கள் அனைவரும் கூடி நிற்கின்றனர். இந்நிலையில் போலீஸாரும் அந்தப் பகுதிக்கு விரைகின்றனர்.

இப்படி சாலையில் சென்ற அனைவரும்கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே துணியால் சுற்றப்பட்ட கிடந்த நபர் திடீரென எழுந்து நடந்து சென்றுவிடுகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. கடைசியில்தான் புரிந்து சாலை ஒரத்தில் கிடந்தது சடலம் அல்ல. வெள்ளைத் துணியால் போத்திக் கொண்டு ஒருவர் தூங்கியிருக்கிறார் என்று.

இச்சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது கடும் வைரலாகி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக் மற்றும் ஆயிரம் ரி டிவிட்களையும் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.