close
Choose your channels

'பரியேறும் பெருமாள்' நடிகர், நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

Friday, February 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நடித்த நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து ’பரியேறும் பெருமா’ள் பட குழுவினர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்பு மிக இயல்பாகவும் மனதை கவரும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெருக்கூத்துகளில் பெண் வேடம் போட்டு நடித்த அவர் இந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார் என்பதும் குறிப்பாக ஒரு க்ச்ச்ட்சியில் நிர்வாணமாக நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நெல்லை தங்கராஜ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை தங்கராஜ் அவர்களுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் புதிய வீடு கட்டித்தந்தது என்பதும் இந்த வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் தங்கராஜுக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.