close
Choose your channels

புதை குழியில் சிக்கிக் கொண்ட யானை. போராடி மீட்கும் பொதுமக்கள்..! வீடியோ.

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உணவு தேடி கிராமத்தில் புகுந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தவறி அங்கிருந்த புதைகுழியில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.

ஒடிஸாவிலுள்ள சுந்தர்கார் மாவட்டத்தின் பிர்டோலா கிராமத்தை அடுத்த படகோன் வனப்பகுதியில் இருந்து யானைக்கூட்டம் புதன்கிழமை இரவு உணவு தேடி பிர்டோலா கிராமத்தில் புகுந்துள்ளது. அப்போது ஒரு யானை அங்கிருந்த புதைக்குழியில் விழுந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை கிராம மக்கள் அந்த யானையை கண்டறிந்துள்ளனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்புத்துறையினருடன் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கிராம மக்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.