close
Choose your channels

தூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயிரிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்!

Tuesday, May 11, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்பின் பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா. இந்தியா கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றபோது இவர் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இவருடைய தந்தை பிரமோத் குமார் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் கொல்கொத்தா அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பியூஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்பில் உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள பதிவில் என்னுடைய வாழ்க்கை முன்பு மாதிரி இருக்காது. நான் என்னுடைய வலிமையான தூணையே இழந்து விட்டேன் என உருக்கமாகப் பதிவிட்டு உள்ளார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து மும்பை ஐபிஎல் அணிக்குழு மற்றும் சக வீரர்கள் பலரும் பியூஷ் சாவ்லாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதை அடுத்து பியூஸ் சாவ்லா வீடு திரும்பினார். ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இவருடைய தந்தை பிரமோத் குமார் நேற்று உயிரிழந்து உள்ளதாகவும் இதனால் தன்னுடைய வாழ்க்கை முன்புமாதிரி இருக்கப் போவதில்லை என்றும் பியூஸ் உருக்கமாகப் பதிவிட்டு இருப்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.