பாடகி ஜானகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்

  • IndiaGlitz, [Tuesday,June 26 2018]

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமாகிவிட்டதாக கடந்த சில மணி நேரங்களாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் தனது தாயாரின் இந்த வதந்தி குறித்து அவரது மகன் முரளி விளக்கமளித்துள்ளார். தனது தாயார் மறைவு குறித்து பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், தனது தாயார் அவரது சொந்த ஊரான ஸ்ரீசைலத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் இருப்பதாகவும் விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எஸ்.ஜானகி குறித்த வதந்தியால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது அவரது மகன் கொடுத்த விளக்கத்தில் நிம்மதி அடைந்துள்ளனர்.

Listen to S. Janaki songs

More News

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: கார்த்தியை பெருமையாக கூறிய சூர்யா

கோலிவுட் திரையுலகில் அண்ணன் தம்பியான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே முன்னணி நடிகர்களாக உள்ளனர். இதற்கு முன் எத்தனையோ சகோதரர்கள் நடிகர்களாக இருந்தாலும்

மெஸ்ஸி, ரொனால்டோ இடையேதான் போட்டி: கமலுக்கு பதிலளித்த ஜெயகுமார்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பும், ஆரம்பித்த பின்பும் அதிமுக அமைச்சர்கள் அவரை அவ்வப்போது விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே.

இந்தியாவுக்கு இதைவிட தலைகுனிவு வேறு எதுவும் வேண்டுமா? அதிர்ச்சி தகவல்

ஒரு காலத்தில் இந்தியா என்றாலே பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் நாடு என்றும், பெண்களை தெய்வம் போல் பாதுகாக்கும் நாடு என்றும் பெயர் இருந்தது.

மமதியிடம் ஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றும் செண்ட்ராயன்

கடந்த ஞாயிறு அன்று கமல் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில், செண்ட்ராயனிடம் கமல் ஆங்கிலத்தில் பேசி அவரை திணறடித்தார். அன்று முதல் கமலிடம் நல்ல ஆங்கிலத்தில் பேசியே தீர வேண்டும்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்

பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாணிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவிக்கு பவன்கல்யாண் ரசிகர்கள் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.