close
Choose your channels

பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மாடியில் இருந்து குதித்த கோவை மாணவி

Wednesday, May 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் தேர்வு முடிவை அறிந்து வருகின்றனர். இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அதிர்ச்சி அடைந்த கோவை மாணவி ஒருவர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த ப்ரியா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வை நன்றாக எழுதியிருந்ததால் நல்ல மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் மதிப்பெண் பட்டியலில் குறைவான மதிப்பெண்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் திடீரென தனது வீட்டின் 4வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதனையறிந்த அவரது பெற்றோர் அலறியடித்து படுகாயம் அடைந்த ப்ரியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ப்ரியாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.