close
Choose your channels

சாலைமறியல் செய்த விஜய் ரசிகர்களை விரட்டியடித்த போலீஸ்: கடலூரில் பரபரப்பு!

Thursday, April 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலூரில் திடீரென சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டி அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ரசிகர் மன்ற காட்சிகள், சிறப்பு காட்சிகள், அதிகாலை காட்சிகள் ஆகியவையும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடலூரில் உள்ள நியூ சினிமா என்ற திரையரங்கில் ‘பீஸ்ட்’ படத்திற்கு ரசிகர் மன்ற காட்சிக்கு தியேட்டர் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் கடலூர் - புதுவை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் செய்த விஜய் ரசிகர்கள் விரட்டியடித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். மேலும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.