close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் தகவல்!

Monday, January 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸிங் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் தகவல் தற்போது கசிந்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் முதல் காட்சியில் வந்தியத்தேவன் குதிரையில் வருவது போன்று அமைந்திருக்கும் காட்சியின்போது படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த 1952ஆம் ஆண்டு வெளியான ’நீலமலைத் திருடன்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’சத்தியமே நிச்சயமாய் வெல்லுமடா’ என்ற பாடலின் வரிகளை ஏஆர் ரகுமான் இந்த பாடலுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் அவரே இந்த பாடலை பாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன மேலும்

இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos