close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' ஓடிடியில் ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்!

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமரர் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவல் அதே டைட்டிலில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஒரு சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேரடியாக முன்னணி ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படக்குழு இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளது. லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவானந்தம் இதுகுறித்து கூறுகையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதலில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் தான் வெளிவரும் என்றும் திரையரங்குகளில் வெளியான பின்னரே ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ நேரடி ஓடிடி ரிலீஸ் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos