close
Choose your channels

ஒரே நேரத்தில் 2 மொழிகளில் அறிமுகமாகும் ப்ரியா ஆனந்த்

Tuesday, April 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் 'வாமனன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த் அதன் பின்னர் 180, எதிர்நீச்சல், அரிமா நம்பி, வணக்கம் சென்னை, வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்,.


ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் நடித்துள்ள ப்ரியா ஆனந்த் தற்போது ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் பிரபல நடிகர் பிரித்விராஜ் படத்திலும், கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் படத்திலும் ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ப்ரியா ஆனந்த் 'கூட்டத்தில் ஒருவன்', 'முத்துராமலிங்கம்' ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.