close
Choose your channels

திடுக்கிடும் தகவல்களை சுயசரிதையில் அம்பலப்படுத்திய விஜய் பட நடிகை!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட் ஹாலிவுட் என உலக அளவில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சுயசரிதையில் பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்ற பிரியங்கா சோப்ரா, அதன்பின் பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக இயக்குனர் ஒருவரை சந்தித்ததாகவும், அப்போது அந்த இயக்குனர் உங்களது மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் என்றும், பின்னழகை மெருகேற்ற வேண்டும் என்றும், தனக்கு தெரிந்த மருத்துவ நண்பர் ஒருவரிடம் சென்றால் அவற்றை சரிசெய்து விடுவார் என்று கூறியது தன்னை மிகவும் கடுப்பேற்றியது என்று சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சல்மான்கான் நடித்த ஒரு படத்தில் செக்ஸியாக ஒரு பாடலுக்கு நடனமாடியபோது அந்த படத்தின் இயக்குனர் தனது உள்ளாடை தெரிய நடனமாட வேண்டும் என்று கூறினார் என்றும், நான் பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் அந்த இயக்குனர் கூறிய விதம் தன்னை மிகவும் புண்படுத்தியதாகவும், நடிகைகளை இழிவாக பார்க்கும் அவருடைய எண்ணம் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் சுயசரிதையில் கூறியுள்ளார்.

Memoir Unfinished என்ற டைட்டில் கொண்ட பிரியங்கா சோப்ராவின் சுயசரிதையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாகவும் இந்த புத்தகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.