close
Choose your channels

புஷ்பவனம் குப்புசாமி மகள் எங்கே? முகநூலில் வெளியான பரபரப்பு வீடியோ

Tuesday, December 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கிராமிய பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோரின் மகள் பல்லவி திடீரென மாயமாகி விட்டதாகவும், அவரை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்று முன்னர் பல்லவி அவர்கள் தனது முகநூலில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். நான் காணாமல் போனதாகவும் என்னுடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. எனது தந்தையார் நேற்று வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை தான் வீடு திரும்பினார். இல்லாத ஒருவர் எப்படி போலீசில் புகார் அளித்து இருக்க முடியும்?

நான் எங்கேயும் செல்லவில்லை? என்னுடைய வீட்டில் என்னுடைய பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறேன். நான் தொலைந்து விட்டதாகவும் என்னை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. எனவே இதனை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம். இந்த செய்தி எங்கே இருந்து ஆரம்பித்தது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். மீடியா எப்படி இப்படி ஒரு பொய்யான செய்தியை பதிவு செய்கின்றனர் என்பது தெரியவில்லை. இந்த செய்தியால் எனக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்து என்னை என்னுடைய பாதுகாப்பு குறித்து பலர் அக்கறையுடன் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி’ என்று பல்லவி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.