close
Choose your channels

'ராதே ஷ்யாம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு

Sunday, March 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் பாசிட்டிவ் மற்றும் கலவையான விமர்சனங்களுடன் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 79 கோடி வசூல் செய்ததாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் மிகப்பெரிய வசூல் செய்ய உதவிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பின்படி இதுவரை வெளிவந்த தெலுங்கு படங்களில் முதல் நாளில் மிக அதிக வசூல் செய்த படம் ’ராதே ஷ்யாம்’ என்று கூறப்படுகிறது. பாகுபலி படத்திற்கு பின்னர் மிகப்பெரிய வசூல் வெற்றி பெற்ற படம் ’ராதே ஷ்யாம்’ என பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.