close
Choose your channels

ஷுட்டிங்கில் 1,000 பாம்புகளை திறந்துவிட்டார்கள்…. நடுங்கிய நடிகை ராதிகாவின் அனுபவம்!

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் தெலுங்கு சினிமா ஒன்றில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் சமீபத்தில் “ஆஹா“ எனும் ஓடிடி தளத்தை உருவாக்கி அதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களை வெளியிட்டு வருகிறார். சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஏற்ற தளமாக வரவேற்பு பெற்றிருக்கும் இந்த ஓடிடி தளம் தற்போது தமிழலும் அறிமுகமாகி இருக்கிறது.

இதற்காக சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அல்லு அரவிந்த் பற்றிய பேசிய அவர், நான் நடிகர் சிரஞ்சீவியுடன் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தேன். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் பாம்புடன் நடிக்க வேண்டி வந்தது. இதனால் ஒரு பாம்புடன் நடிக்க வேண்டும் என்று அல்லு அரவிந்த் கூறினார். ஆனால் எனக்கு பாம்பு என்றாலே பயம். எனவே மறுத்துவிட்டேன்.

இதைத்தொடர்ந்து சும்மா வந்து நில்லு என்று அல்லு அரவிந்த் கூறினார். எனவே ஷுட்டிங் ஸ்பாட்டில் போய் நின்றேன். திடீரென்று ஆயிரம் பாம்புகளை திறந்து விட்டார்கள். இதனால் பதறிப்போய் வாய்க்கு வந்ததையெல்லாம் கத்த ஆரம்பித்துவிட்டேன். அப்போது நான் பயத்தில் கூறியதை எல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பயந்துவிட்டேன் என்று தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.