close
Choose your channels

பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ்-ராகவா லாரன்ஸ்

Monday, January 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை மெரீனாவில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் ஒருசில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இதனால் மெரீனா உள்பட சென்னையின் ஒருசில பகுதிகளில் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு கடந்த ஒருவாரமாக முழு ஒத்துழைப்பு கொடுத்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராகவா லாரன்ஸ், மாணவர்களின் நிலையை அறிய மெரினா செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பாதியிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இருப்பினும் ராகவா லாரன்ஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் அந்த இடத்தை விட்டு அகலாமல் போலீசார் உடன் பேச்சுவார்த்தை நடத்தி மெரின்னாவுக்கு செல்ல முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களை வெளியேற்ற காவல்துறை முயற்சி செய்தால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம் என மாணவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதால் காவல்துறை தரப்பு தற்போது போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.