close
Choose your channels

ஜீவாதான் என் அடுத்த படத்தின் நாயகன்- எம்.ராஜேஷ்

Sunday, August 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யாவின் 25வது படமான 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக ஆர்யா தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த படத்திற்கான முன்பதிவும் தொடங்கிவிட்ட நிலையில் எம்.ராஜேஷ் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்.ராஜேஷ் கூறியதாவது. 'VSOP படத்திற்கு பின்னர் நான் கூறிய ஒன்லைன் கதை நடிகர் ஜீவாவுக்கு பிடித்துவிட்டதை அடுத்து இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் விரைவில் ஈடுபட உள்ளேன். 'VSOP படத்தின் ரிலீஸுக்கு பின்னர் புதிய படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். ஜீவாதான் என் அடுத்த படத்தின் நாயகன். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்து இன்னும் டிஸ்கஸ் செய்யவில்லை.

வழக்கமான என்னுடைய படங்களை போல இந்த படமும் காதல், காமெடி, நட்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும்' என்று கூறியுள்ளார். ஜீவா தற்போது பாபிசிம்ஹாவுடன் 'கவலை வேண்டாம்', நயன்தாராவுடன் "திருநாள்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். விரைவில் எம்.ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பிலும் இணைவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.