close
Choose your channels

டெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக கட்டுக்கடங்காத வகையில் வன்முறை, கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தில் காவல்துறையினர் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயணா டெல்லி கலவரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ’டெல்லியில் தற்பொழுது நடைபெறும் கலவரம் மிகவும் தவறான செயல் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது எதிர்கட்சியாலோ அல்லது வேறு சிலராலோ தான் திட்டமிட்டு டெல்லியில் கலவரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தான் முழு ஆதரவு அளிப்பதாகவும், பிரதமர் மோடி குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் சரி ஆகி விடும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு ’ரஜினிகாந்த் கட்சி துவங்குவது குறித்த தகவலை அவரே புத்தாண்டு தினத்தில் அறிவிப்பார் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.