close
Choose your channels

முன்னாள் முதல்வரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த். மகன் வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என சந்தித்த புகைப்படத்தை முன்னாள் முதல்வரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆக இருந்தவர் உத்தவ் தாக்கரே. இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பையில் அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளார். உத்தவ் தேவ் தாக்கரே அவருடைய மனைவி ராஷ்மி மற்றும் மகன்கள் ஆதித்யா, தேஜாஸ் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வரவேற்பு கொடுத்த புகைப்படம் ஆதித்யாவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்ட ரஜினிகாந்த் ஏற்கனவே அவரை சந்தித்த நிலையில் தற்போது பால்தாக்கரேவின் மகனை அவருடைய இல்லத்தில் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த கிரிக்கெட் போட்டி காண்பதற்காக மும்பை சென்ற ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவருடைய குடும்பத்தையும் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.