close
Choose your channels

ரஜினிகாந்த் பாராட்டிய 'மீன் குழம்பும் மண் பானையும்'

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 'சிவாஜி புரடொக்ஷன்ஸ்' நிறுவனம் பல தரமான வெற்றி படங்களை தயாரித்து வந்த நிலையில், தற்போது சிவாஜி குடும்பத்தின் வாரீசான துஷ்யந்த் 'ஈஷான் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அமுதேஷ்வர் இயக்குகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் நடைபெறவிருப்பதால் இந்த படத்திற்காக லொகேஷன் பார்க்க சமீபத்தில் மலேசியாவுக்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சென்றிருந்தனர். அப்போது மலேசியாவில் 'கபாலி' படப்பிடிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து தங்களது புதிய நிறுவனம், மற்றும் புதிய படம் குறித்து தெரிவித்தனர்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் போலவே இந்த நிறுவனமும் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்திய ரஜினிகாந்த், படத்தின் தலைப்பை கேட்டதும் இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகும் என ஆசி வழங்கினார்.

இந்த படத்தில் பிரபுவுடன் காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சவேரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.