சென்னை திரும்பினார் ரஜினி: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

  • IndiaGlitz, [Wednesday,July 11 2018]

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாக டார்ஜிலிங் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

இதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் தனது அரசியல் கட்சியின் பணிகளை கவனிப்பார் என தெரிகிறது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே நடைபெற்ற பிரச்சனை காரணமாக ஸ்ரீராகவேந்திரர் மண்டபத்தில் இயங்கி வந்த தலைமை அலுவலகத்தை ரஜினி மூட உத்தரவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்த பிரச்சனை குறித்து ரஜினி சென்னை திரும்பியதும் பேசுவார் என்று கூறப்பட்டது. அதன்படி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பியுள்ள நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படமான '2.0' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'2.0' ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '2.0'.

மூன்று நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா சென்ற 'தமிழ்ப்படம் 2'

சிவா நடிப்பில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இன்னும் ஒரே ஒரு சிறுவன்: குகை மீட்பு பணியில் உள்ளவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

தாய்லாந்து நாட்டில் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் என 13 பேர் சிக்கிக் கொண்டனர். குகைக்குள் இவர்கள் சிக்கிய நேரத்தில்

சர்கார் விவகாரம்: அன்புமணிக்கு சவால் விடுத்த சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் டைட்டில் 'மாநாடு' என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

'சர்கார்' விஜய் கெட்டப்பை லீக் செய்த வரலட்சுமி

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த சர்ச்சை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னொரு புறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது