close
Choose your channels

சர்கார் விவகாரம்: அன்புமணிக்கு சவால் விடுத்த சிம்பு

Tuesday, July 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் டைட்டில் 'மாநாடு' என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் 'மாநாடு' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் தான் அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் இந்த படம் உருவாக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை என்றும், ஆனால் இந்த படத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை தைரியமாக சொல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீண்ட நெடுங்காலமாக சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இருக்ககூடாது என்று அன்புமணி உள்ளிட்ட ஒருசிலர் பேசி வருவதாகவும், 'பாபா' முதல் 'சர்கார்' வரை இது தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறிய சிம்பு இதுகுறித்த ஒரு விவாதத்தை அன்புமணி அவர்கள் ஏற்பாடு செய்தால் அந்த விவாதத்தில் தான் கலந்து கொண்டு தங்கள் தரப்பு நியாயத்தை மக்களுக்கு தெரிவிக்க தயாராக இருப்பதாக கூறினார்.

அன்புமணி அவர்களே ஒரு நாள் குறித்தால் அந்த நாளில் விவாதத்தை வைத்து கொள்ளலாம் என்று சிம்பு கூறியுள்ள நிலையில் இதற்கு அன்புமணியின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.