close
Choose your channels

சென்னை திரும்பினார் ரஜினி: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Wednesday, July 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை திரும்பினார் ரஜினி: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாக டார்ஜிலிங் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

இதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் தனது அரசியல் கட்சியின் பணிகளை கவனிப்பார் என தெரிகிறது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே நடைபெற்ற பிரச்சனை காரணமாக ஸ்ரீராகவேந்திரர் மண்டபத்தில் இயங்கி வந்த தலைமை அலுவலகத்தை ரஜினி மூட உத்தரவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்த பிரச்சனை குறித்து ரஜினி சென்னை திரும்பியதும் பேசுவார் என்று கூறப்பட்டது. அதன்படி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பியுள்ள நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படமான '2.0' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.