close
Choose your channels

ரஜினியின் அடுத்த சமூக சிந்தனையுடன் கூடிய வாய்ஸ்

Monday, September 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்காக தனது டுவிட்டரில் வாய்ஸ் கொடுப்பது வழக்கம். பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, நீட், அனிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தனது டுவிட்டரில் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த் தற்போது நதிகள் இணைப்பிற்காக மீண்டும் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:  ''இரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் இரத்தநாளங்கள்... அதைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் ஜீவநதியாக்க சத்குரு எடுக்கும் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்' என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நதிகள் இணைப்பிற்காக கடந்த பல வருடங்களாக ரஜினிகாந்த் குரல் கொடுத்து வருவது தெரிந்ததே. நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தவர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.