close
Choose your channels

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக திரைப்படம்: ராஜ்கிரண் அறிவிப்பு

Friday, April 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய ’என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 30 ஆண்டுகள் கழித்து உருவாக இருப்பதாக ராஜ்கிரண் ஏற்கனவே அறிவித்திருந்தார்

இந்த படத்தை அவரது மகன் நைனார் முஹம்மது என்பவர் இயக்கவிருக்கிறார் என்பதும் அவருக்கு வெறும் 20 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’என் ராசாவின் மனசிலே’ படம் ரிலீசாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ராஜ்கிரண் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இறை அருளால்,
"என் ராசாவின் மனசிலே"
30 ஆண்டுகள் நிறைவுற்றது...
"என் ராசாவின் மனசிலே"
இரண்டாம் பாகத்தை,
என் மகன் நைனார் முஹம்மது
எழுதி, இயக்குகிறார்.
கதையை எழுதி முடித்து விட்டு,
திரைக்கதை எழுதுவதில்
தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
வெகு விரைவில் படப்பிடிப்பை தொடங்க
திட்டமிட்டிருக்கிறார்.
இறை அருளால், இப்படமும் மாபெரும்
வெற்றியடைய,
உங்கள் பிரார்த்தனைகளையும்,
வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.