close
Choose your channels

சிவகார்த்திகேயன் பட ஹீரோவின் அடுத்த படத்தில் ரம்யா நம்பீசன்

Monday, October 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் நாயகனான ரியோ ராஜ் அடுத்ததாக 'செம போத ஆகாதே' இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசனின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என கருதியதால் அவர் ஒப்பந்தம் செய்யப்படதாகவும் இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்

சென்னை, கொடைக்கானல், கேரளா, குஜராத் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு கதை என்றும் இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்தில் பாலசரவணன், ரோபோ சங்கர், முனிஸ்காந்த், விஜி, சந்தானபாரதி, ஆடுகளம் நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.