சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்

  • IndiaGlitz, [Thursday,September 29 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இயக்குனர் மோகன் ராஜா பிசியாக உள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, சினேகா, ஃபஹத் பாசில், சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் ரோபோ சங்கர் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரும் தற்போது இணைந்துள்ளனர். இருவருமே சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் மூவருமே தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இருந்து திரைக்கு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது 'ரெமோ' படத்தின் புரமோஷனில் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் படப்பிடிப்பு தேதி முடிவு செய்யப்படும் என்று மோகன் ராஜா தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

More News

உதயநிதியின் அடுத்த படத்தில் இணைந்த இரு வில்லன்கள்

'மனிதன்' வெற்றிக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தை 'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' இயக்குனர் கவுரவ் நாராயணன்...

தமன்னா

பிரபல நடிகை தமன்னா, விஜய்சேதுபதியுடன் நடித்த 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது....

விஜய்சேதுபதிக்கு மேலும் 3 திரைப்படங்கள்

கோலிவுட் திரையுலகில் இன்றைய தேதியில் பிசியான கதாநாயகன் என்றால் அது விஜய்சேதுபதிதான். இந்த ஆண்டு ஏற்கனவே சேதுபதி'...

விஜய்-அட்லி படத்தின் நாயகி-இசையமைப்பாளர் இவர்களா?

இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன்...

கும்பகோணம் கோவிலுக்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா சென்றது ஏன்?

'நானும் ரெளடிதான்' வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்த விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென இருவரும் சமீபத்தில் கும்பகோணம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.