close
Choose your channels

பொள்ளாச்சி விவகாரம்: புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Saturday, March 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போதிலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்ததால்தான் இந்த விஷயம் தற்போது வெளியே தெரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலையும் மீறி புகார் அளித்த பெண்ணின் பெயரை போலீசார் கூறி அவரை பயமுறுத்தியது. அதுமட்டுமின்றி மேலும் பல பெண்கள் புகாரளிக்க வராமல் இருக்க போலீஸ் எடுத்த நடவடிக்கை இது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.