close
Choose your channels

கொரோனா பாதிப்பு- 6 நாட்களுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி!

Friday, April 2, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஜாம்பவனாகத் திகழ்ந்து தற்போது இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வரும் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி டிவிட்டரில் தகவல் வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர், தனக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் பாசிட்டிவ் என முடிவு வந்ததை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனையுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு தற்போது சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் மருத்துவப் பரிந்துரையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டு உள்ள சச்சின் தனது டிவிட்டரில் “உங்கள் ஆசிகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி. மருத்துவ அறிவுரை காரணமாக ஏகப்பட்ட முன்னெச்சரிக்கைகளுடன் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். இன்னும் சில நாட்களில் நலமாக வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் ஜாக்கிரதையாக பாதுகாப்பாக இருங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.

அதோடு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சச்சின் ஒரு மகிழ்ச்சியான தகவலை தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் இந்தியா உலகக் கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியர்களுக்கும் அணிக்கும் 10 ஆம் ஆண்டு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கான வாழ்த்துகள் எனத் தெரிவித்து உள்ளார். இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடைய பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.