close
Choose your channels

சிரஞ்சீவிக்கு 'நோ', மகேஷ்பாபுவுக்கு 'யெஸ்': சாய்பல்லவியின் அதிரடி முடிவு!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படத்தில் தங்கையாக நடிக்க முடியாது என்று கூறிய சாய்பல்லவி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுக்கு தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ’வேதாளம்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்து வரும் நிலையில் லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க சாய்பல்லவியிடம் தான் படக்குழுவினர் முதலில் அணுகினர். ஆனால் அவர் தங்கை கேரக்டரில் நடிக்க முடியாது என்று மறுத்ததாகவும், இதனையடுத்தே அந்த கேரக்டரில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் மகேஷ்பாபு தங்கையாக நடிக்க சாய்பல்லவி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி யோசித்ததாகவும், ஆனால் திரிவிக்ரம் படத்தை தவற விடக்கூடாது என்ற காரணத்தினால் அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.