close
Choose your channels

நீட் தேர்வால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்று உள்ளனர் என்பதும் தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் என்ற பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு எழுதினார்.

இந்த தேர்வில் அவர் எதிர்பார்த்தை விட குறைவான மதிப்பெண் வந்ததால் கடந்த 1ஆம் தேதி அவர் மனவேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்து உள்ளார். இதனால் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு அச்சம் காரணமாக தேர்வு அன்றும், தேர்வுக்கு பின்னரும் ஒருசில மாணவிகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.