close
Choose your channels

'ஜெய்பீம்' வெற்றி எதிரொலி: பழங்குடியின மாணவிகளுக்கு உதவிய விஜய், சூர்யா ரசிகர்கள்!

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பழங்குடியின மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் மனதில் தோன்றி உள்ளது என்பதும் அந்த அளவுக்கு ஒரு திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’ஜெய்பீம்’ திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பழங்குடியின பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவருக்கு உதவித்தொகை வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களும் பழங்குடியின பெண்களுக்கு உதவி செய்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றிபெற்ற கோவையைச் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு விஜய் ரசிகர்கள் ரூபாய் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போனை வாங்கி கொடுத்துள்ளனர். அதேபோல் திண்டுக்கல்லில் பழங்குடியின மக்களுக்கு சூர்யாவின் ரசிகர்கள் மளிகை பொருட்களை அளித்து உதவி செய்துள்ளனர்.

பழங்குடியினர் குறித்து பேசும் ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் தாக்கம் காரணமாக விஜய் சூர்யா ரசிகர்கள் பழங்குடியின பெண்களுக்கு செய்த உதவி செய்துள்ளதை அடுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.