close
Choose your channels

இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஷங்கர்-ராம்சரண் தேஜா படம்: முக்கிய வேடத்தில் இவரா?

Sunday, April 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ராம் சரண் தேஜாவின் தந்தையும் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியும் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கசிந்ததை அடுத்து படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது.

மேலும் இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான க்யாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே பிரமாண்டத்தின் உச்சம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் தற்போது சல்மான்கான் இணைவதாக கூறப்படுவதால் இந்திய திரையுலகத்தையே இந்த படம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை ஷங்கர் மற்றும் எஸ்எஸ் ராஜமௌலி ஆகிய இருவரும் ’பாகுபலி 2’ மற்றும் ’2.0’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வந்தார்கள் என்பதும் இரண்டுமே வசூலில் பெரும் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ராஜமௌலி ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற பிரமாண்டமான படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்திற்கு இணையாக மற்றொரு பிரம்மாண்டமான படத்தை ஷங்கர் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.