close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்' செம அப்டேட்டை வெளியிட்ட சமந்தா!

Thursday, April 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் செம அப்டேட்டை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் குறிப்பாக டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்ததாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் அபூர்வமான மனிதர்களால் என்னுடைய வேலை எளிமையாகிறது, விரைவில் உங்கள் முன் இந்த படம் திரையிடப்படும், அனைவருக்கும் நன்றி’ என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.