close
Choose your channels

சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

Friday, July 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்வராகவன் தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இதுவரை கனமான பாத்திரங்களுடன் அழுத்தமான திரைக்கதை அம்சங்களுடன் கூடிய படங்களை இயக்கி வந்த செல்வராகவன் முதல்முறையாக ஒரு ஜாலியான காமெடி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு கூறப்படுவதற்கு முக்கிய காரணம் அவர் தேர்வு செய்துள்ள ஹீரோ
ஆம் செல்வராகவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த தகவலை செல்வராகவன் மற்றும் சந்தானம் ஆகிய இருவருமே தங்கள்த சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளனர் இருவேறு துருவங்கள் இணையும் இந்த படம் இப்பவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.