ஜோதிகா பட பாடலை ஜோராக பாடிய சாயிஷா

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

சூர்யா, ஜோதிகா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'காக்க காக்க' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் என்றாலும் ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்த பாடல் 'ஒன்றா இரண்டா' என்ற பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல்தான். இதனை ஜோதிகா பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கணவர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து 'டெடி' என்ற படத்தில் நடித்து வரும் நடிகை சாயிஷா, படப்பிடிப்பின் இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் 'ஒன்றா இரண்டா' பாடலை பாடி அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மும்பையை சேர்ந்த தமிழ் தெரியாத ஒரு பெண், தமிழ்ப்பாடலை பிழையின்றி ஜோராக பாடியதை கேட்டு நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனக்கு பாடுவது மிகவும் பிடிக்கும் என்றும், படப்பிடிப்பின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் இந்த பாடலை பாடினேன் என்றும் குறிப்பிட்ட சாயிஷா, பயிற்சி எடுத்து கொள்ளாமல் இந்த பாடலை தான் பாடியதாகவும், இதில் ஏதும் பிழை இருந்தால் பொறுத்துகொள்ளவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

தோழியுடன் இணைந்து பேபிக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா!

ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று வழிபடுவது ரஜினி, அஜித் உள்பட பல நடிகர்  நடிகைகளின் வழக்கமாக இருந்து வருகிறது.

கிரண்பேடியின் டுவீட்டுக்கு பாராட்டும் கண்டனமும் தெரிவித்த பிரபல நடிகை!

புதுவை கவர்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அம்மாநில முதல்வருக்கு குடைச்சல் கொடுத்து வரும் கிரண்பேடி தற்போது மாநில எல்லை தாண்டி தமிழக அரசியல், தமிழக மக்கள் குறித்தும்

விஜய்யின் 'பிகில்' படத்தில் ஷாருக்கான் குத்தாட்டம்?

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட்டை அளித்த அர்ச்சனா கல்பாதி!

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை விஜய்யின் பிறந்த நாள் பரிசாக அளித்த இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி

கவினுக்கு எதிராக களமிறங்கிய மீராமிதுன்: பொங்கிய ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன் நுழையும் வரை போட்டியாளர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் மீராமிதுன் நுழைந்த